ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிஆர் ஸ்ரீஜேஷுக்கு 2 கோடி ரூபாய் பரிசு
33-வது ஒலிம்பிக் தொடரில், இந்தியா வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தது. இந்தியா 2-1 என ஸ்பெய்னை வெற்றி கண்டது, இதில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல் அடித்தார். வெண்கலப் பதக்கம் வென்றதும், கோல் கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதற்கிடையில், கேரள அரசு பிஆர் ஸ்ரீஜேஷ்க்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்க தீர்மானித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு ஏற்கப்பட்டது.