குஜராத்தில் தேர்தலில் வாக்களிக்கும் சதவிகிதத்தை அதிகரிக்க வாக்காளர்களுக்கு 20 லட்சம் அழைப்புகளை அனுப்ப தேர்தல் கமிஷன் முடிவு எடுத்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் மே 27ஆம் தேதி 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அங்கு ஓட்டளிக்கும் சதவிகிதத்தை அதிகரிக்க மாநிலம் முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு 20 லட்சம் அழைப்புகளை அனுப்ப தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.