டெல்லியில் தீவிர வெப்ப அலை காரணமாக இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர்.
வட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. பல்வேறு இடங்களில் இயல்பு நிலையை விட 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. மேலும் பகல் நேரங்கள் மட்டுமல்லாது இரவு நேரங்களிலும் வெப்ப காற்று வீசி வருகிறது. இதில் டெல்லியில் கடந்த மே 27ஆம் தேதி முதல் இன்று வரை வெப்ப அலையில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வெப்ப அலையின் தாக்கத்தால் இதுவரை 45க்கும் மேற்பட்டோர் உடலில் நீர் சத்து குறைபாடுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தீவிர வெப்ப அலையின் தாக்கம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது