நாளையிலிருந்து கோவை - ஊட்டிக்கு 25 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோடை சீசனை ஒட்டி கோவையிலிருந்து நாளை முதல் 25 சிறப்பு பேருந்துகள் ஊட்டிக்கு இயக்கப்பட உள்ளது. ஊட்டியில் மலர்க்கண்காட்சி தொடங்க உள்ளதால் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஊட்டியில் மலர்கண்காட்சியானது வருகிற பத்தாம் தேதி முதல் இருபதாம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நீலகிரிக்கு வருவோர் இ பாஸ் கொண்டு செல்ல ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏழாம் தேதி முதல் ஜூன் 30-ம் […]

கோடை சீசனை ஒட்டி கோவையிலிருந்து நாளை முதல் 25 சிறப்பு பேருந்துகள் ஊட்டிக்கு இயக்கப்பட உள்ளது.

ஊட்டியில் மலர்க்கண்காட்சி தொடங்க உள்ளதால் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஊட்டியில் மலர்கண்காட்சியானது வருகிற பத்தாம் தேதி முதல் இருபதாம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நீலகிரிக்கு வருவோர் இ பாஸ் கொண்டு செல்ல ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏழாம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மக்கள் அனைவரும் தங்கள் சொந்த வாகனங்களை தவிர்த்து அரசு பேருந்துகளில் பயணிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நாளை முதல் கோவையிலிருந்து ஊட்டி மற்றும் கூடலூர் 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனால் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து கோடை விழாவை காண நீலகிரிக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu