டெல்லியில் பெண்களுக்கான “பிங்” பூங்காக்கள் 250 இடங்களில் அமைய இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
டெல்லியில் வார்டு வாரியாக 250 இடங்களில் “பிங்” பூங்காக்கள் அமைக்க டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த பூங்காக்களில் ஆண்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்கள், சிசிடிவி கேமராக்கள், உடற்பயிற்சிக்கான வசதிகள், வண்ணம் தீட்டப்பட்ட சுவர் மற்றும் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த திட்ட விரிவாக்கத்திற்கு முதல்வர் கெஜ்ரிவால் அனுமதி வழங்கி இருப்பதாகவும் பெண்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக இந்த பூங்காக்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.