சென்னையில் 2,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன.
சென்னையில் 5 ஆயிரம் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இவை தவிர, ஆவடி, தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
மறைமலை நகர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேளச்சேரி, திருவான்மியூர் வழியாக கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலைகள் நீலாங்கரை பல்கலை நகர் கடலில் கரைக்கப்பட்டன. காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய இடங்களிலும் பெரிய சிலைகள் ராட்சத கிரேன் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டன.
சென்னை நகர் முழுவதும் நேற்று 21 ஆயிரத்து 800 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.