சனாதனம் குறித்து பேசியதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி 262 பேர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய கருத்து நாடு முழுவதும் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு 262 பேர் ஒன்றிணைந்து கடிதம் எழுதி உள்ளனர். இதில் ஓய்வு பெற்ற நீதிபதிகள்,எழுத்தாளர்கள் உள்ளிட்ட பிரபலர்கள் பலரும் அடங்கியுள்ளனர்.
மேலும் இதில் உதயநிதி பேசிய பேச்சு சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதன் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதை வெறுப்பு பேச்சால் அவர் தடுக்க வேண்டும். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது அரசு, போலீசாரே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். உதயநிதி மீது இந்த வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் நடவடிக்கை இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.