குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானிநகர் பகுதியில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 242 பேரில், ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற ஒருவர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். அதோடு மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் விழுந்ததால் மேலும் 33 பேர் பலியாகி, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 274ஆக உயர்ந்துள்ளது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமம் தலைவர் சந்திரசேகரன் அறிவித்திருந்தார். இந்நிலையில், உடனடி தேவைகளுக்காக மேலும் ₹25 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.