சேலம் காவல் ஆணையர் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஆவடி காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாரி, சேலம் மாவட்ட காவல் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். சேலம் மாவட்ட காவல் ஆணையராக இருந்துவரும் ஐபிஎஸ் அதிகாரி நஜ்மல் ஹோடா ஆவடி காவல் ஆணையரகத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்.
சென்னை ரயில்வே காவல் துறை டிஐஜியாக இருந்துவரும் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் ஆவடி காவல் சரக இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.