35 ஆவது தேசிய சீனியர் வாள் வீச்சுப்போட்டியில் கிஷோ நிதி மற்றும் பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றனர்.
கேரளாவில் நடைபெறும் 35-வது தேசிய சீனியர் வாள் வீச்சுப் போட்டியில், தமிழ்நாட்டை சேர்ந்த கிஷோ நிதி மற்றும் பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றனர். டிசம்பர் 31-ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி ஜனவரி 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆண்கள் பிரிவில் கிஷோ நிதி 15-11 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார், இதேபோல் பெண்கள் பிரிவில் பவானி தேவி 15-5 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் சாதித்தார்.