சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.
வென்பெங் மாவட்டத்தில் உள்ள அன்யாங் நகரில் கைசிண்டா வர்த்தக நிறுவனத்தில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 36 பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 2 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீ பரவாமல் தடுத்தனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து தொடர்பாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலவீனமான பாதுகாப்பு மற்றும் அவற்றைச் செயல்படுத்தும் அதிகாரிகளின் ஊழல் காரணமாக சீனாவில் தொழில்துறை விபத்துக்கள் ஏற்படுவது பொதுவான ஒன்றுதான்.