அமெரிக்க அதிபர் தேர்தலில் களமறங்கும் 3வது இந்திய வம்சாவளி நபர்

அமெரிக்காவில், அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்வுகள் கட்சியளவில் தொடங்கப்பட்டுள்ளன. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதே வேளையில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதே வேளையில், குடியரசு கட்சி சார்பில் 3 இந்திய வம்சாவளியினர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். நிக்கி ஹேலி மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் குடியரசு […]

அமெரிக்காவில், அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்வுகள் கட்சியளவில் தொடங்கப்பட்டுள்ளன. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதே வேளையில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதே வேளையில், குடியரசு கட்சி சார்பில் 3 இந்திய வம்சாவளியினர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

நிக்கி ஹேலி மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தல் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மூன்றாவதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஷ்வர்தன் சிங் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

அடுத்த ஜூலை மாதத்தில், அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். தற்போதைய நிலையில், மேற்குறிப்பிட்ட 3 இந்திய வம்சாவளியினரைக் காட்டிலும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu