சென்னை தீவுத்திடல் பொருட்காட்சிக்கு 4½ லட்சம் பேர் வருகை - அமைச்சர் ராமச்சந்திரன் 

February 1, 2023

சென்னை தீவுத்திடலில் நடந்து வரும் இந்திய சுற்றுலா-தொழில் பொருட்காட்சிக்கு 4½ லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார். தமிழக சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம், சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசுகையில், தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் […]

சென்னை தீவுத்திடலில் நடந்து வரும் இந்திய சுற்றுலா-தொழில் பொருட்காட்சிக்கு 4½ லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார்.

தமிழக சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம், சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசுகையில், தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

இதுவரை 3 லட்சத்து 64 ஆயிரத்து 76 பெரியவர்கள் மற்றும் 85 ஆயிரத்து 682 சிறிவர்கள் சேர்த்து மொத்தம் 4 லட்சத்து 49 ஆயிரத்து 758 பொதுமக்கள் பார்வையிட்டுள்ளார்கள் என்று அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் லி.பாரதிதேவி, சுற்றுலாத்துறை இணை இயக்குனர் ப.புஷ்பராஜ் உள்பட சுற்றுலாத்துறை உயர் அலுவலர்கள், சுற்றுலா அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu