வருகின்ற ஆறாம் கட்ட பாராளுமன்ற தேர்தல் அன்று டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 5 கட்ட வாக்கு பதிவுகள் முடிவடைந்துள்ளது. இதனை அடுத்து வருகிற 25-ம் தேதி ஆறாம் கட்ட வாக்கு பதிவும், ஜூன் ஒன்றாம் தேதி ஏழாம் கட்ட வாக்கு பதிவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நாளன்று டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என காலை 6 மணி வரை ரயில்கள் இயங்கும் எனவும் காலை 6:00 மணிக்கு பிறகு வழக்கமான அட்டவணையின் கீழ் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது