சென்னையில் 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அண்ணாமலை, ஜனவரி 7, 8, 9 மற்றும் 11 ஆகிய 4 நாட்களை தேர்வு செய்துள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி ராமநாதபுரத்தில் நடைபயணத்தை தொடங்குகிறார். இதைதொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அவர் டிசம்பர் வரை நடைபயணம் மேற்கொணவார்.அடுத்த ஆண்டு ஜனவரி 2-ந்தேதி திருவள்ளூரில் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு ஜனவரி 4-ந்தேதி மதுரவாயல், அம்பத்தூரில் நடைபயணம் செல்கிறார்.
சென்னையில் 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அண்ணாமலை, ஜனவரி 7, 8, 9 மற்றும் 11 ஆகிய 4 நாட்களை தேர்வு செய்துள்ளார். வருகிற 28-ந்தேதி தொடங்கும் அண்ணாமலையின் நடைபயணம் ஜனவரி 11-ந்தேதி சென்னையில் முடியும் வகையில் பயண திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அண்ணாமலை 5 மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடைபயணத்துக்கு தமிழகம் முழுவதும் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.