ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 40 பேர் பலியாகினர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 22 பேர் பலியாகினர். இது குறித்து அங்குள்ள அதிகாரிகள் கூறியதாவது, காங்கோவில் கசாய் சென்ட்ரல் மாகாணத்தின் கனாங்கா மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 40 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் அடங்குவர். அதோடு பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பில் 20 பேர் மாயமாகியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.