சென்னையில் 48 ஆவது புத்தக கண்காட்சி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.
48-வது புத்தக கண்காட்சி சென்னையில் டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி திறக்கவுள்ளனர். புத்தகக் கண்காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்படுள்ளன, மேலும் புத்தகங்கள் 10% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. கண்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை, வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்படும். அதோடு, சொற்பொழிவுகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் காட்சியில் இடம்பெறுகின்றன.