துறையூர் புளியஞ்சோலை வனப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை

துறையூர் வனப்பகுதியில் அமைந்துள்ள புளியஞ்சோலை சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தர தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் வனப்பகுதியில் புளியஞ்சோலை சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு அழகிய மலைமுகடுகள், அடர்ந்த மரங்கள், காடுகள் சிற்றோடைகள் என ஏராளமாக உள்ளது. தற்போது வெயிலின் தாக்கத்தை குறைக்கும் அளவில் மழை பெய்து உள்ளதால் புளியஞ்சோலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இங்கு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் நீர்வீழ்ச்சியில் இருந்து சிற்றோடையாக கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலை […]

துறையூர் வனப்பகுதியில் அமைந்துள்ள புளியஞ்சோலை சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் வனப்பகுதியில் புளியஞ்சோலை சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு அழகிய மலைமுகடுகள், அடர்ந்த மரங்கள், காடுகள் சிற்றோடைகள் என ஏராளமாக உள்ளது. தற்போது வெயிலின் தாக்கத்தை குறைக்கும் அளவில் மழை பெய்து உள்ளதால் புளியஞ்சோலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இங்கு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் நீர்வீழ்ச்சியில் இருந்து சிற்றோடையாக கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலை பகுதியில் உள்ள ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் புளியஞ்சோலைக்கு சுற்றுலா வந்த போது நீரில் தவறி விழுந்து உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து வனப்பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu