மத்திய அமைச்சரவை 5 புதிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி உள்ளது.
2004-ம் ஆண்டு, காங்கிரசின் ஆட்சியில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு ஒடிசா மொழிக்கு இந்த அந்தஸ்து அளிக்கப்பட்டது. தற்போது, பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை 5 புதிய மொழிகள் வங்காளம், மராத்தி, பாலி, அசாமி மற்றும் பராகீர் ஆகியவை செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிக்கிறது.