அரசு பணியில் புதிய நியமனங்கள் – 50 பேருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நியமன ஆணைகள் வழங்கினார்
தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 50 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான விழாவில் நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மே 2021 முதல் இதுவரை இந்தத் துறையில் மொத்தம் 177 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.