கடலில் மிதந்த போதை பொருள் - இத்தாலி அரசு கைது நடவடிக்கை

July 22, 2023

இத்தாலியின் கடற் பகுதியில் சுமார் 5.3 டன் எடை கொண்ட, ரூபாய் 7,700 கோடி மதிப்புள்ள கோகைன் என்ற போதை பொருள் கடத்தப்பட்டது. இதை இத்தாலி காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இத்தாலியின் சிசிலி நகரின் தெற்கு கடல் பகுதியில் இருந்து பயணிக்கும் தென் அமெரிக்காସ୍ସ୍ கப்பலை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். அப்போது சிசிலி ஜலசந்து பகுதியில் கப்பலில் இருந்து பெரிய பெரிய பார்சல்கள் கடலில் வீசி எறியப்பட்டது. இது இழுவை படகை மூலம் வேறு இடத்திற்கு எடுத்துச் […]

இத்தாலியின் கடற் பகுதியில் சுமார் 5.3 டன் எடை கொண்ட, ரூபாய் 7,700 கோடி மதிப்புள்ள கோகைன் என்ற போதை பொருள் கடத்தப்பட்டது. இதை இத்தாலி காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இத்தாலியின் சிசிலி நகரின் தெற்கு கடல் பகுதியில் இருந்து பயணிக்கும் தென் அமெரிக்காସ୍ସ୍ கப்பலை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். அப்போது சிசிலி ஜலசந்து பகுதியில் கப்பலில் இருந்து பெரிய பெரிய பார்சல்கள் கடலில் வீசி எறியப்பட்டது. இது இழுவை படகை மூலம் வேறு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக செய்யப்பட்டுள்ளது. இதனை கண்காணிப்பு விமான மூலம் இத்தாலி அரசு கண்டுபிடித்து உடனடியாக கைது நடவடிக்கை செய்தது.

இழுவை படகை நிறுத்தி பரிசோதித்த பொழுது அதில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.மேலும் இதில் தொடர்புடைய துனிசியாவை சேர்ந்த இருவர், ஒரு இத்தாலியர், ஒரு அல்பேனியர் மற்றும் ஒரு பிரெஞ்சு நாட்டவரை கைது செய்துள்ளனர். போதைப்பொருள் கடத்தலை தடுத்த காவல்துறையினரை சிசிலி பிராந்திய தலைவர் பாராட்டி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu