ரூ.2,753 கோடி மதிப்பில் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகள் ரூ.1000 பெறுவதால் இந்த ஆண்டில் 10 ஆயிரத்து 500 மாணவிகள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். தொழில் துறை 4.0 தரத்திற்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை திறன் மிகு மையங்களாக மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் செயல்படுத்த உள்ளோம். குறிப்பாக 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் 2 ஆயிரத்து 753 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளது என்று அவர் கூறினார்.