குனார் மாகாணத்தை மையமாக கொண்டு நடந்த பயங்கர நிலநடுக்கம்; வீடுகள் இடிந்து மண்ணில் புதைந்த நூற்றுக்கணக்கானோர்.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள குனார் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நங்கர்ஹார் மாகாணத்தின் நுலாலாபாத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகியது.
மண்ணால் கட்டப்பட்ட வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதால், தூக்கத்தில் இருந்த மக்கள் பெரும்பாலோர் சிக்கினர். முதலில் 800 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வந்த நிலையில், தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,500 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஊடக மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் அப்துல் ஜப்பார் பெஹிர் தெரிவித்தார். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.