தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. கொலம்பியா தலைநகர் போகோடாவின் தென்கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பின் அதிர்வுகளும் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கியது. அப்போது மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மெட்ல்லின் மற்றும் காலி உள்ளிட்ட நகரங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வரவில்லை.