பாராளுமன்ற தேர்தலில் நேற்று நடைபெற்ற ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் 60.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலும், ஏப்ரல் 26 ஆம் தேதி 88 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தலும், மே 7ஆம் தேதி 93 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட தேர்தலும், கடந்த 13ஆம் தேதி 96 தொகுதிகளுக்கான நான்காம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. அவ்வகையில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 60.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 76.05% வாக்குகளும், குறைந்தபட்சமாக பாராட்டியத்தில் 54.33 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது