லிபியா கடற்கரை அருகே அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில் 61 பேர் பலியாகி உள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடி அவ்வப்போது அகதிகள் படகு வாயிலாக மக்கள் செல்கின்றனர். இந்நிலையில் சமீப காலமாக அகதிகள் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. கடந்த சனிக்கிழமை லிபியா கடற்கரைக்கு அருகே அகதிகள் படகு ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 61 பேர் பலியாகினர் என்று ஐநாவின் சர்வதேச அகதிகள் அமைப்பு கூறியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, சுமார் 86 அகதிகள் கொண்ட படகு லிபியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள சுமாரா நகரத்துக்கு அருகே வந்தபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 61 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
ஒரு தன்னார்வ அமைப்பு அகதிகள் குறித்து தகவல் அளித்து வருகிறது. அது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், சில அகதிகள் எங்களுடைய தன்னார்வலர்களிடம் வந்து சேர்ந்தனர். இது தொடர்பாக லிபியாவின் கடலோர காவல் படை அதிகாரிகளிடம் தகவல் அளித்துள்ளோம் என்று கூறியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 2250 க்கும் மேற்பட்ட அகதிகள் கடலில் உயிரிழந்ததாக ஐநா தெரிவித்துள்ளது.