கொடைக்கானலில் கோலாகலமாக இன்று 61வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது.
கொடைக்கானலில் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 61வது மலர்கள் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று காலை 8 மணிக்கு கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் தொடங்கியுள்ளது. இங்குள்ள பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக லட்சக்கணக்கான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. மேலும் மலர்களால் ஆன மயில், கரடி விலங்குகளின் உருவம் ஆகியவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோடை விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த கோடை விழாவில் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.