நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற நான்கு கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும், 95 கோடி வாக்காளர்களில் மொத்தம் 45.10 கோடி பேர் வாக்களித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் 5,6 மற்றும் 7வது கட்ட வாக்கு பதிவு நடைபெறும் மாநிலங்களில் அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது