பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 5 மாநிலங்களில் எட்டு கலெக்டர்கள் மற்றும் 12 போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணைய மறு ஆய்வு கூட்டம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி 5 மாநிலங்களில் 8 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் 12 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாற்றப்பட்டவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்க ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.