நடப்பு 2022-23 நிதியாண்டில் அக்டோபர் மாதம் காரிஃப் சந்தைப்படுத்தல் தொகுப்பில் அரசாங்கத்தின் நெல் கொள்முதல் 12 சதவீதம் உயர்ந்து 170.53 லட்சம் டன்னாக உள்ளது என்று உணவு அமைச்சகம் தெரிவிக்கிறது.
75க்கும் மேற்பட்ட இந்திய கேரியர் விமானங்கள் பராமரிப்பு மற்றும் இன்ஜின் சம்பந்தபட்ட பிரச்சனைகள் காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஏவியேஷன் கன்சல்டன்சி நிறுவனமான CAPA தெரிவித்துள்ளது.
UPI மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் அக்டோபர் மாதத்தில் 7.7 சதவீதம் அதிகரித்து 730 கோடியாக உள்ளது.
வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் அக்டோபர் மாத மொத்த விற்பனையில் 21 சதவீதம் அதிகரித்து 1,67,520 யூனிட்களை எட்டியுள்ளது.
எஃப்எம்சிஜி நிறுவனமான ப்ராக்டர் அண்ட் கேம்பிள், புதுமையான தொழில்நுட்பத்தை மேம்படுத்த ரூ.200 கோடி நிதியை அறிவித்துள்ளது.