நேற்று வனவாட்டுக்கு தெற்கே 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசுபிக் பெருங்கடலின் தெற்கே வனவாட்டு குடியரசு அமைந்துள்ளது. இது தீவுகள் கொண்ட நாடாகும். இந்த தீவுகளில் எரிமலைகள் அதிகம் உள்ளன. இந்நிலையில் நேற்று வனவாட்டுக்கு தெற்கே 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் ஆழத்தில் தலைநகர் போர்ட் விலாவில் இருந்து 338 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சுனாமி எச்சரிக்கை மையம் குறிப்பிடுகையில், நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி உருவாக சாத்தியம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை.