தற்போது ஜேஎன்1 என்ற மாறுதல் அடைந்த கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் தற்போது ஜேஎன்1 என்ற மாறுதல் அடைந்த கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக கர்நாடகா அரசின் அமைச்சரவை குழு சில தடுப்பு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதில் தற்போது பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிகளை பின்பற்றுதல் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மேலும் கொரோனா அறிகுறிகளுடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். அதிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் வேறு நோய் தொற்று உள்ளவர்கள் கட்டாயம் முன்னெச்சரிக்கை தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்காக அரசு எந்த தடையும் இதுவரை விதிக்கப்படவில்லை. இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.