இன்று மாலை நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகையையொட்டி ஐ.டி. நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. சில வடமாநிலங்களில் இந்த பயிற்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய 2 இடங்களில் போர்க்கால ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் அச்சமோ அல்லது பதற்றமோ அடைய வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், இந்த ஒத்திகைக்கான ஏற்பாடுகளுக்கு ஏற்றாக, இன்று மாலை நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகையையொட்டி ஐ.டி. நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை பணிக்கு வர வேண்டாம் என அறிவித்துள்ளது.