ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரேவண்ணாவிடம் விசாரணை நடத்த மேலும் 7 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் எம்.பி பிரஜுவல் ரேவண்ணா தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இவரின் தந்தை மற்றும் எம்எல்ஏவான ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேவண்ணாவை நான்கு நாட்கள் காவலில் எடுத்து போலீஸ் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விசாரணை முடிந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட ரேவண்ணாவிற்கு மீண்டும் 7 நாட்கள் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் காவலை நீட்டிக்குமாறு சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து வரும் 14ஆம் தேதி வரை விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள