பெங்களூரில் குற்றங்களை தடுக்கவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நகரின் 3,000 இடங்களில் 7,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக மத்திய அரசு 'நிர்பயா நிதி திட்டத்தை' அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், பெங்களூரு நகரின் 3,000 இடங்களில் 7,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கியுள்ளது. இந்த கேமராவில் முகம், வாகன பதிவு எண், ஏ.என்.பி.ஆர்., என்ற தானியங்கி வாகன பதிவு எண் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளதால் படங்களை தெளிவாக அடையாளம் காட்டும்.
இக்கேமராக்களை முக்கிய சாலைகளின் நடைபாதை, பேருந்து நிலையம், ஓய்வறை, பொது இடம், மைதானம், மத வழிபாட்டு மையங்கள் என பல இடங்களில் தனி கம்பங்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது. நகர காவல்துறை ஆணையர் அலுவலக கட்டடத்தில் 'கமாண்டோ மையம்' உள்ளது. இங்குள்ள ஊழியர்கள், கண்காணிப்பு கேமரா மூலம் அந்தந்த இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.