மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அவரை வணங்குகிறேன், அவருடைய ஆழ்ந்த எண்ணங்களை நினைவு கூர்கிறேன். நமது தேசத்தின் சேவையில் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன் என கூறியுள்ளார்.