வட சென்னையில் புதிய விளையாட்டு வளாகத்திற்கு ரூ.9.70 கோடி மானியம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022 ஏப்.21-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில், வடசென்னை பகுதி இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன குத்துச்சண்டை வளாகம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து விளையாட்டு வளாகம் அமைக்க மாநகராட்சியால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, தண்டையார்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் அமைக்க நிர்வாக அனுமதியும், இதற்கான செலவினம் ரூ.9.70 கோடி மானியமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.