சீனாவில் ஏற்பட்ட நெருக்கடிக்கு பின்னர், அலிபாபா தலைவர் ஜாக் மா, ஜப்பானில் உள்ளதாக தகவல்

November 30, 2022

அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா, சீன அரசின் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார். அதன் பின்னர், கடந்த ஆறு மாத காலமாக, அவர் ஜப்பானின் டோக்கியோவில் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் பணக்கார மனிதராக ஜாக் மா இருந்தார். கடந்த 2020ல், சீன அரசாங்கத்தையும், அதிகாரிகளையும் மிகவும் விமர்சித்தார். அதைத் தொடர்ந்து, அவரது ‘அண்ட்’ குழுமத்திற்கும், அலிபாபா இணைய வர்த்தக நிறுவனத்திற்கும் பல்வேறு இன்னல்கள் உண்டாக்கப்பட்டன. இதனால் கடந்த வருடம் மிகுந்த இழப்பை இந்த நிறுவனம் […]

அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா, சீன அரசின் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார். அதன் பின்னர், கடந்த ஆறு மாத காலமாக, அவர் ஜப்பானின் டோக்கியோவில் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் பணக்கார மனிதராக ஜாக் மா இருந்தார். கடந்த 2020ல், சீன அரசாங்கத்தையும், அதிகாரிகளையும் மிகவும் விமர்சித்தார். அதைத் தொடர்ந்து, அவரது ‘அண்ட்’ குழுமத்திற்கும், அலிபாபா இணைய வர்த்தக நிறுவனத்திற்கும் பல்வேறு இன்னல்கள் உண்டாக்கப்பட்டன. இதனால் கடந்த வருடம் மிகுந்த இழப்பை இந்த நிறுவனம் சந்தித்தது. எனவே, பொதுமக்களின் பார்வையில் இருந்து ஜாக் மா வெளியேறினார்.

அண்மையில், அலிபாபா, டென்சென்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்களை சட்டவிரோதமாக அறிவிக்கும் சட்ட திருத்தத்தில், சீனா மாற்றங்களை கொண்டு வந்தது. குறிப்பாக, அலிபாபா நிறுவனத்தின் மீது 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஜாக் மா ஜப்பானில் உள்ளது தெரியவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu