ஐரோப்பிய விண்வெளி மையம், விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு, 262 அடி அகலமுள்ள விண்கல்லை கண்டறியும் புதுமையான சவால் ஒன்றை விடுத்துள்ளது. 2015 RN35 என்ற பெயருடைய இந்த விண்கல், ‘கிறிஸ்துமஸ் விண்கல்’ என்றே அறியப்படுகிறது.
இது வெறும் வேடிக்கையான சவாலாக மட்டும் விடுக்கப்படவில்லை. பூமியை அச்சுறுத்தும் வகையிலான இந்த விண்கல், டிசம்பர் 15ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வர உள்ளது. அத்துடன், பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்படும் அபாயகரமான நிலையில் உள்ள இந்த விண்கல், மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக் கூடிய வகையில் பெரிய அளவிலானதும் கூட. இந்திய நேரப்படி, டிசம்பர் 15ஆம் தேதி மதியம் 1:42 மணியளவில், நிலவுக்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தைப் போன்ற இரு மடங்கு தொலைவுக்கு (அதாவது 686000 கிலோமீட்டர்) வரவுள்ளது.