இந்திய பங்குச் சந்தை, தொடர்ந்து இரு நாட்களாக பெரும் சரிவை சந்தித்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில், கரடியின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 461 புள்ளிகள் குறைந்து, 61337.81 ஆக நிலை கொண்டது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 145.9 புள்ளிகள் குறைந்து 18269 ஆக உள்ளது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கி, பேங்க் ஆப் இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் முக்கிய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன. இதனால், உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. முதலீட்டாளர்கள் பெரும் அளவிலான இழப்பை சந்தித்து வருகின்றனர். இதனால், மும்பை பங்குச்சந்தையின் சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் 3.02 லட்சம் குறைந்து, 285.46 லட்சம் கோடி ஆக உள்ளது.