அணு ஆயுத பயன்பாடு குறித்த பிரதமர் மோடியின் பார்வை ரஷ்யாவை பாதித்துள்ளதாகவும், உலக அளவிலான பேரழிவை தவிர்த்துள்ளதாகவும் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இயக்குனர் பில் பர்ன்ஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இயக்குனர் பில் பர்ன்ஸ் நேற்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் அணு ஆயுதங்களின் பயன்பாடு குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். இது ரஷ்யர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான திட்டங்களுக்கு தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை.
மேலும் அவர் அணு ஆயுத பயன்பாடு குறித்த பிரதமர் மோடியின் பார்வை உலக அளவிலான பேரழிவை தவிர்த்தது என்று கூறியுள்ளார்.