பசுமை வீடுகளுக்கு நிதி உதவி வழங்க 400 மில்லியன் டாலர் கடன் பெற்றுள்ள எச்டிஎப்சி வங்கி

December 24, 2022

தி இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன், எச்டிஎப்சி வங்கிக்கு 400 மில்லியன் கடன் தொகையை வழங்கி உள்ளது. பசுமை வீடுகளை கட்டுபவர்களுக்கு வீட்டுக் கடன் வழங்குவதற்காக இந்தத் தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நகரங்களில் பசுமை வீடுகளை கட்டி, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு வழிவகுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்டிஎப்சி தரப்பில் இருந்து 300 மில்லியன் டாலர்கள் கேட்கப்பட்டதாகவும், ஆனால் 400 மில்லியன் டாலர்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் புள்ளி விவர அடிப்படையில், 275 மில்லியன் […]

தி இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன், எச்டிஎப்சி வங்கிக்கு 400 மில்லியன் கடன் தொகையை வழங்கி உள்ளது. பசுமை வீடுகளை கட்டுபவர்களுக்கு வீட்டுக் கடன் வழங்குவதற்காக இந்தத் தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நகரங்களில் பசுமை வீடுகளை கட்டி, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு வழிவகுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்டிஎப்சி தரப்பில் இருந்து 300 மில்லியன் டாலர்கள் கேட்கப்பட்டதாகவும், ஆனால் 400 மில்லியன் டாலர்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் புள்ளி விவர அடிப்படையில், 275 மில்லியன் மக்கள் முறையான வீட்டு வசதி இல்லாமல் உள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே, வீட்டுக் கடனுக்காக இத்தகைய பெரும் தொகை ஒதுக்கப்படுவதால், நாட்டின் 22% மக்கள், குறைந்த விலையில் பசுமை வீடுகளுக்கு குடிபெயரும் நிலை உருவாக்கப்படும் என்று நம்புவதாக எச்டிஎப்சி நிர்வாகி ரேணு சூட் கர்னாட் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu