தென்கொரியா, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விண்வெளி ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் இந்த விண்வெளி ராக்கெட் சோதனை நிகழ்த்தப்பட்டது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட திரவ எஞ்சின் கொண்ட நூரி ராக்கெட் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அது பல்வேறு செயற்கை கோள்களை பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம், திடப்பொருள் புரோபெல்லன்ட் மூலம் இயங்கும் ராக்கெட் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தென்கொரிய நாடு, விண்வெளி துறையில் தொடர் முன்னேற்றங்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.