அலங்காநல்லூரில் ஜனவரி 17ல் ஜல்லிக்கட்டு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

January 7, 2023

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை வரும் 17ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வரும் 17ம் தேதி அரசு வழிகாட்டுதல் படி சிறப்பாக நடைபெறும். ஜல்லிக்கட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறந்த காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்குவார். பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் வழங்கப்படும். சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் […]

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை வரும் 17ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வரும் 17ம் தேதி அரசு வழிகாட்டுதல் படி சிறப்பாக நடைபெறும். ஜல்லிக்கட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறந்த காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்குவார். பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் வழங்கப்படும். சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளைக்கு, மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும்.

மேலும், அரசின் வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். தகுதி சான்றுடன் ஆன்லைன் பதிவு பெற்ற காளைகள் மட்டுமே இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu