தேசிய அளவிலான காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டியை டிஜிபி சைலேந்திரபாபு துவக்கி வைத்தார்.
‘23-வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி, நேற்று தொடங்கியது. வரும் 13-ம் தேதி வரை இப்போட்டி நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் உயர் பயிற்சியக மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. போட்டியை டிஜிபிசைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். அப்போது பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படுவர். உங்களுடைய ஒத்துழைப்புதான் இந்த போட்டியின் மிகபெரிய வெற்றியாகும் என்றார்.
மேலும், அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறையினர், மத்திய காவல் அமைப்பினர் என சுமார் 700 க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர்.