ஈபே நிறுவனத்தில் 500 பேர் பணி நீக்கம்

February 9, 2023

தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் வரிசையாக பணிநீக்கங்களை அறிவித்து வருகிற நிலையில், ஈபே நிறுவனம் அந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளது. இணைய வர்த்தகத் துறையில் முன்னணி நிறுவனமாக உள்ள ஈபே, தனது 4% பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே, கிட்டத்தட்ட 500 பேர் வரை நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஈபே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாமி லானொன், பணியாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய முறையில் நிலவிவரும் பொருளாதார மந்த […]

தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் வரிசையாக பணிநீக்கங்களை அறிவித்து வருகிற நிலையில், ஈபே நிறுவனம் அந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளது. இணைய வர்த்தகத் துறையில் முன்னணி நிறுவனமாக உள்ள ஈபே, தனது 4% பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே, கிட்டத்தட்ட 500 பேர் வரை நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஈபே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாமி லானொன், பணியாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய முறையில் நிலவிவரும் பொருளாதார மந்த நிலை காரணமாக பணிநீக்கம் செய்யப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பணி நீக்க நடவடிக்கையால், எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப, ஈபே நிறுவனத்தின் செயல்திறன் அதிகரிக்கும் என்று அதில் சொல்லப்பட்டுள்ளது. எனவே, நுகர்வோர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தர முடியும் என உறுதியாக கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பின்னர், நிறுவனத்தின் பங்குகள் 1% வரை உயர்ந்து வர்த்தகமாயின.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu