நேற்று, பிப்ரவரி 22ஆம் தேதி, சூரியனில் புதிய கரும்புள்ளி ஒன்று உள்ளதாகவும், அது தொடர்ந்து நிலையற்ற முறையில் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏஆர் 3234 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கரும்புள்ளி ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, திங்கட்கிழமை முதல், 6 முறை எம் கிளாஸ் சூரிய வெடிப்புகள் பூமியை தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை பூமியின் வளிமண்டல மேற்பரப்பை தாக்கி, தொலைதொடர்பு இணைப்புகளை துண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், ஏற்பட்ட கதிர்வீச்சுகளால், குறைந்த பிரிகுவன்சி அலைகள் மூலம் இயங்கும் சேவைகள் பாதிப்படைந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இனி வரும் நாட்களில் இதைவிட பெரிய சூரிய புயல் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஏஆர் 3234 சூரிய கரும்புள்ளையானது, பூமியை நோக்கிய திசையில் தொடர்ந்து இருப்புக் கொள்ளும் என்று கருதப்படுகிறது. எனவே, இன்னும் சில தினங்களுக்கு, சூரிய புயல் தாக்குதலை பூமி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட எக்ஸ் கிளாஸ் சூரிய புயல்கள், பூமியைத் தாக்க கூடும் என்று கருதப்படுகிறது. முன்னதாக, இந்த வாரத்தில், அதைவிடக் குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய எம் கிளாஸ் சூரிய அலைகள் பூமியைத் தாக்கின. இதனால், சில இடங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.