மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகர் இல்லை என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சில நபர்கள் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயணசீட்டு பரிசோதகராக மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகளிடம் பயணசீட்டு பரிசோதனை என்ற பெயரில் அபராதம் வசூலிப்பதாக நிர்வாகதிற்கு தகவல் வந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பயணசீட்டு பரிசோதனை என்ற பணியிடமே கிடையாது. பயணசீட்டு பரிசோதகர் என்ற பெயரில் விஷமதனமான செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.