காஷ்மீரில் அமைக்கப்படும் உலகின் உயரமான ரெயில்வே பாலம்

March 27, 2023

காஷ்மீரில் அமைக்கப்படும் உலகின் உயரமான ரெயில்வே பாலம் மே மாதம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக செனாப் நதியின் குறுக்கே கேபிள் மூலம் இணைக்கும் ரெயில்வே பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2018-ல் இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. சுமார் 193 மீட்டர் உயரம் மற்றும் 725.5 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான இந்த கேபிள் பாலம் அமைக்கும் பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. எனவே வருகிற மே மாதத்துக்குள் பொதுமக்களின் […]

காஷ்மீரில் அமைக்கப்படும் உலகின் உயரமான ரெயில்வே பாலம் மே மாதம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக செனாப் நதியின் குறுக்கே கேபிள் மூலம் இணைக்கும் ரெயில்வே பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2018-ல் இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. சுமார் 193 மீட்டர் உயரம் மற்றும் 725.5 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான இந்த கேபிள் பாலம் அமைக்கும் பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. எனவே வருகிற மே மாதத்துக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும்.

இது குறித்து வடக்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், 120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது என கணிக்கப்பட்டுள்ள இந்த பாலம் 40 கிலோ வெடி பொருட்கள் வெடிப்பையும் தாங்கக்கூடிய திறன் கொண்டதாக அமைகிறது. எனவே இதில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதில் ஏராளமான சென்சார்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதன் மூலம் விபத்துகள் தவிர்க்கப்படும். இந்த பாலம் ரூ.1,486 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu