சீனாவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய், 2022 ஆம் ஆண்டில் கடும் சரிவை பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 69% இழப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில், 113.7 பில்லியன் நிகர லாபத்தை இந்த நிறுவனம் பதிவு செய்திருந்தது. இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு, 35.6 பில்லியன் யுவான் அளவில் மட்டுமே லாபம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹூவாய் நிறுவனத்தின் இயக்கத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து சவால்கள் எழுந்தன. அதனையும் மீறி சாதித்துள்ளதாக ஹூவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தொடர்ந்து பல்வேறு உயரங்களை எட்ட உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், அதே வேளையில், ஹூவாய் நிறுவனத்தின் சாதனங்கள் வழியே சீனா உளவு பார்ப்பதாக கருதப்படுவதால், ஹூவாய் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட முக்கிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், உலகளாவிய முறையில் 5ஜி தொழில்நுட்ப வளர்ச்சியால், ஹூவாய் நிறுவனத்திற்கு சாதகமான சூழல் ஏற்படும் என்று கருதப்படுகிறது.